பாக். அதிகாரிகள் அவமரியாதை
இந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். அதிகாரிகள் அவமரியாதை*
இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா விடுதியில் இந்திய தூதரகம் சார்பில் ரமலான் நோன்பினை முன்னிட்டு சனிக்கிழமை இப்தார் விருந்து அளிக்கப்பட்டது .
இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது ஓட்டலை முற்றுகையிட்ட பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் சிறப்பு விருந்தினர்களை அவமரியாதை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை திரும்பி போகவும் செய்தனர்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்திய தூதர் அஜய் பிசாரியா கண்டனம் தெரிவித்ததுடன், இது தூதரக அடிப்படை விதிகளை மீறிய செயல் என்றும் இரு தரப்பு உறவுகளுக்கு எதிரானது என்றும் விருந்தினர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்
தெரிவித்துள்ளார்.
what'sapp குரூப்பில் இணையhttps://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
Comments
Post a Comment