எட்டு வழி சாலையின் தடையை நீடித்த கோர்ட்
எட்டு வழி சாலை திட்டம் தடை நீடிப்பு கோர்ட் அதிரடி
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழி பசுமை விரைவுச்சாலை அமைக்க, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிட்டு, பணிகள் நடைபெற்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு வெளயிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எட்டு வழி சாலைகான தடையை தற்காலிகமாக நெடிக்கப்படும் என கூறியுள்ளனர்.
Comments
Post a Comment