மீண்டும் ஸ்டாலின் சட்டை கிழிப்பு நாடகம் போட முயற்சி செய்கிறார் போல நாராயண் திருப்பதி
சட்டப்பேரவையை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்*
திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டப்படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்து விடும் என்றும் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் செய்ததில் திரும்பி பார்த்த Up துணை முதல்வர்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை
"பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசு துறைகளின் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டவே அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது-அதிமுக அரசுக்கு ஆக்கபூர்வமான விவாதங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் இந்த அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை.
"தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்னைகளை எல்லாம் விவாதிக்கவும், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் பற்றி மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து பட்ஜெட் அறிக்கையின் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை வளர்ச்சி திட்டங்களுக்கும், தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்திடவும் உடனடியாக தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்."
Comments
Post a Comment